தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் : இளம்பெண்களை அழைத்து வந்த 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம், இளம்பெண்களை அழைத்து செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம், இளம்பெண்களை அழைத்து செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த மக்பூர் மசூத், மமூன் மியா ஆகியோர் 13 மற்றும் 18 வயது பெண்களுடன், மலேசிய விமானத்திற்காக காத்திருந்த போது, அவர்களது பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பெண்களின் பாஸ்போர்ட்டுகளும் போலியானது என தெரியவந்தது. இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், பர்மாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அந்த 2 இளம் பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை போலி பாஸ்போர்ட்டில் அழைத்து செல்ல முயற்சித்தது ஏன் என்ற கோணங்களில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு