தமிழ்நாடு

"19 ஆயிரம் கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர்" - அமைச்சர் முன்னிலையில் பகிரங்கமாக தெரிவித்த ஆட்சியர்

பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் கந்தசாமி, டெல்லியில் நடைபெற்ற பெண்கள் சராசரி விகித கருத்தரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றிருந்தார். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரே இவ்வாறு பேசியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை