தமிழ்நாடு

நகை வாங்குவது போல கடைக்குள் நுழைந்து 17 சவரன் கொள்ளை

புடவைக்குள் நகையை ஒளித்து கொள்ளை அடித்த 'பலே பெண்கள்'

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் நகைக்கடை நடத்தி வரும் அஷ்ரஃப் அலி என்பவர், கடந்த 15ம் தேதி தனது தந்தை முகமது கனியிடம், கடையை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

மறுநாள் காலையில், அஷ்ரஃப் அலி, வழக்கம் போல் கடைக்கு வந்து நகைகளை சரி பார்க்கும் போது, 11 மோதிரம் ,4 கம்மல், இரண்டு செயின் உட்பட 17 சவரன் நகை காணாமல் போய் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து, தனது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை அஷ்ரஃப் அலி ஆய்வு செய்துள்ளார். அப்போது, 15ஆம் தேதி பிற்பகலில், தனது தந்தை கடையில் இருந்தபோது, ந்கை வாங்குவது போல கடைக்குள் நுழைந்த மூன்று பெண்கள், நகைகளை பார்ப்பது போல நடித்து, அவற்றை எடுத்து தங்களது புடவைக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. நகையை கொள்ளையடித்துச் சென்ற மூன்று பெண்களையும், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்