தமிழ்நாடு

சிறையில் இருந்த இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

சொத்து வழக்கில் சிறையில் இருந்த இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து இளவரசி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தந்தி டிவி

சொத்து வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இளவரசி இருந்து வருகிறார். இந்த நிலையில் இளவரசியின் சகோதரர் வடுகநாதன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால் தனக்கு 15 நாட்கள் பரோல் வேண்டும் என இளவரசி விண்ணப்பித்து இருந்தார். இளவரசியின் மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை நிர்வாகம் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்து பரோல் வழங்கியது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் முடிந்து நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்