தமிழ்நாடு

சிறையில் இருந்த இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

சொத்து வழக்கில் சிறையில் இருந்த இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து இளவரசி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தந்தி டிவி

சொத்து வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இளவரசி இருந்து வருகிறார். இந்த நிலையில் இளவரசியின் சகோதரர் வடுகநாதன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால் தனக்கு 15 நாட்கள் பரோல் வேண்டும் என இளவரசி விண்ணப்பித்து இருந்தார். இளவரசியின் மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை நிர்வாகம் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்து பரோல் வழங்கியது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் முடிந்து நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்