தமிழ்நாடு

சிறையில் இருந்த இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

சொத்து வழக்கில் சிறையில் இருந்த இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து இளவரசி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தந்தி டிவி

சொத்து வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இளவரசி இருந்து வருகிறார். இந்த நிலையில் இளவரசியின் சகோதரர் வடுகநாதன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால் தனக்கு 15 நாட்கள் பரோல் வேண்டும் என இளவரசி விண்ணப்பித்து இருந்தார். இளவரசியின் மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை நிர்வாகம் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்து பரோல் வழங்கியது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் முடிந்து நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை