தமிழ்நாடு

தாய்லாந்து பெண்ணிடம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பெண்ணை சோதித்தவர்கள் மேல் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை கண்டுபிடித்தனர். பெண் அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவரை பின் தொடர்ந்து தங்கத்தை வாங்க வந்த சண்டிகரை சேர்ந்த லவ்லின் கசப் என்பவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதே போல் சுங்க இலாகா பகுதியில் பிளாஸ்டிக் பொருளில் கேட்பாரற்று கிடந்த ரூ 23 லட்சம் மதிப்புடைய 700 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"