தமிழ்நாடு

தாய்லாந்து பெண்ணிடம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பெண்ணை சோதித்தவர்கள் மேல் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை கண்டுபிடித்தனர். பெண் அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவரை பின் தொடர்ந்து தங்கத்தை வாங்க வந்த சண்டிகரை சேர்ந்த லவ்லின் கசப் என்பவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதே போல் சுங்க இலாகா பகுதியில் பிளாஸ்டிக் பொருளில் கேட்பாரற்று கிடந்த ரூ 23 லட்சம் மதிப்புடைய 700 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்