தமிழ் தேர்வு குறித்து 12ஆம் வகுப்பு மாணவிகள் கருத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளாக மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது. பெரும்பாலான மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதினர். சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள், வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும், மற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.