காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி பெரியமசூதி வளாகத்திற்கு வந்த முதலமைச்சர், காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் அரசு விழாவில் கலந்து கொண்டனர்.