தமிழ்நாடு

11ம் வகுப்பு மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை - குமரியில் அதிர்ச்சி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவனை வலுக்காட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனை, அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகவும், அதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதை அடுத்து, விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்