தமிழ்நாடு

11ம் வகுப்பு மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை - குமரியில் அதிர்ச்சி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவனை வலுக்காட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனை, அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகவும், அதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதை அடுத்து, விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"