தமிழ்நாடு

விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 11 பேர் கைது

மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கொழும்பு, துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் 11 பேர் தங்கள் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்த, சுமார் 3 கிலோ 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு