தமிழ்நாடு

"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு கல்வியாளர்கள் உட்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்தது. இதனிடையே பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் கூறினார். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதம் மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 11ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுவதாக கூறிய அவர், 12ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வு சூழலுக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி