காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள கடலிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக முட்டுக்காடு படகு குழாம் காலை 9 மணிக்கே திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.