நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ், மார்ச் மாதம் வேலை பார்த்த 26 லட்சத்து 84 ஆயிரத்து 989 பேருக்கு இரண்டு நாள் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்காக 123 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.