தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் 10 பேரை, அவர்களின் மாநிலத்திற்கே சென்று கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மின்னஞ்சல் மூலமாக பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.