தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 10 பேருக்கு சிறைக்காவல்

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை வரும் 21-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அனுமதி பெற்று, இலங்கை திருகோணமலை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி படகை சிறைப்பிடித்தனர். படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும், வரும் 21-ஆம் தேதி வரை திருகோணமலை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்