தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 10 பேருக்கு சிறைக்காவல்

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை வரும் 21-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அனுமதி பெற்று, இலங்கை திருகோணமலை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி படகை சிறைப்பிடித்தனர். படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும், வரும் 21-ஆம் தேதி வரை திருகோணமலை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’