தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த 3 பேர் குளிர்சாதன பெட்டியின் மோட்டார் மற்றும் சூட்கேஸ் சக்கரம் ஆகியவற்றில் 900 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்துள்ளனர். அதேபோல் துபாயில் இருந்து வந்த 2 பேர் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 400 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு 42 லட்சம் ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ