மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், சூப்பர் ஓவரில் பெங்களூரு அணியை வீழ்த்தி உத்தரப்பிரதேச அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பெங்களூரு அணியில், எல்லிஸ் பெரியின் அதிரடி ஆட்டத்தால், அந்த அணி 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சோபி எக்லெஸ்டோன்(Sophie ecclestone) 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றார். சூப்பர் ஓவரில் உ.பி. வாரியர்ஸ் 8 ரன்களே அடித்த போதும், சோபி எக்லஸ்டோன் அபாரமாக பந்துவீசி பெங்களூரு அணியை 4 ரன்களில் மடக்கி, உ.பி.வாரியர்ஸ் அணியை வெற்றிப்பெற வைத்தார்.