விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்ஹோஹைன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இன்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், துருக்கியை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை சுர்மனேலியுடன் இந்திய வீராங்கனை லவ்லினா மோதினார். 3 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மனேலி நேர்த்தியான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 5-க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் சுர்மனேலி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். போட்டியில் தோல்வி அடைந்தாலும், அரையிறுதி வரை முன்னேறியதால் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கல பதக்கம் வென்று லவ்லினா சாதனை படைத்து உள்ளார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில், மீராபாய் சானு, சிந்துவைத் தொடர்ந்து, லவ்லினாவால் இந்தியாவிற்கு 3-வது பதக்கம் கிடைத்து உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை