TNPL 2ம் கட்ட லீக் போட்டி - துவக்கி வைத்தார் SRM பாலாஜி சத்யநாராயணன்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2ம் கட்ட லீக் போட்டிகள் துவங்கியுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பாலாஜி சத்ய நாராயணன் தொடக்கி வைத்தார். 8 அணிகள் மோதும் இந்த தொடரில் மொத்தம் 21 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் 23ம் தேதி ப்ளே ஆஃப் சுற்றுகளும், ஆகஸ்ட் 28ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும். நடப்பு டி.என்.பி.எல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சீருடை ஸ்பான்சராக SRM நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.