விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 குவித்தது. அதிரடியாக ஆடிய அபரஜித் 76 ரன்களும், சித்தார்த் 50 ரன்களும் , சதீஷ் 47 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 193 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"