விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி வெற்றி.

தந்தி டிவி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய காரைக்குடி காளை அணி, 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அனிருதா, 28 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் கோபிநாத் 47 ரன்கள் அடித்தார். இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"