விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி வெற்றி.

தந்தி டிவி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய காரைக்குடி காளை அணி, 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அனிருதா, 28 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் கோபிநாத் 47 ரன்கள் அடித்தார். இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்