2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை Tejaswini Sawant தகுதி பெற்றுள்ளார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடும் தொடரின் மகளிருக்கான ரைபிள் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு தேஜாஸ்வினி முன்னேறினார். இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இதுவரை 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.