விளையாட்டு

காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

திருச்சியில், நடைபெற்ற தமிழக காவல்துறைக்கான 58 வது குழு விளையாட்டு போட்டிகளில், 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். காவல்துறையினருக்கு புத்துணர்வு, மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில், அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறையினருக்காக, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகிற 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி.ஜியா உல்ஹக், டிஐஜி லலிதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்