விளையாட்டு

காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

திருச்சியில், நடைபெற்ற தமிழக காவல்துறைக்கான 58 வது குழு விளையாட்டு போட்டிகளில், 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். காவல்துறையினருக்கு புத்துணர்வு, மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில், அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறையினருக்காக, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகிற 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி.ஜியா உல்ஹக், டிஐஜி லலிதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு