விளையாட்டு

வெள்ளி, வெண்கலம் வென்று தமிழக வீரர்கள் அபாரம்

வெள்ளி, வெண்கலம் வென்று தமிழக வீரர்கள் அபாரம்

thanthitv

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்....

காமன்வெல்த் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பிரவீன் சித்ரவேலும், மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபுவும் களமாடினர்....

டிரிபிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட பிரவீன் சித்ரவேல் 16 புள்ளி 58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார்...

கடந்த காமன்வெல்த் தொடரில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட பிரவீன், இம்முறை வெள்ளி வென்று அசத்தியுள்ளார்....

இதே போட்டியில் மதுரையைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் செல்வ பிரபு 16 புள்ளி 52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்...

ஒரே போட்டியில் 2 தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ள நிலையில் இருவருக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்...

மேலும், பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்....

Serial Actress | ``பலாத்காரம் செய்து வீடியோ’’ - ஏமாற்றப்பட்ட தமிழ் சீரியல் நடிகை

Kanniyakumari | குமரியில் தலைகீழாக மாறிய கடல்.. அப்படியே ஸ்தம்பித்து நின்ற சுற்றுலா பயணிகள்

Sivakasi | படு கோரமாக கொல்லப்பட்ட பெண் குழந்தை.. தாயின் 2வது கணவரின் மிருகச்செயல்

Kovai Railway Station Video| இரவோடு இரவாக நடந்த சம்பவம்.. விடிந்ததும் அதிர்ந்த கோவை

#BREAKING || Bhavanisagar Dam | ஒரே இரவில் திடீரென அதிகரித்த நீர்வரத்து