விளையாட்டு

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி?

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

இதனிடையே, மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராக தேர்வுசெய்ய பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிஜேஷ் படேலுக்கு, ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பொருளாளராக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமல் ஆகியோரும் ஒருமனதாக தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையின்படி, பிசிசிஐ அமைப்பை கடந்த 33 மாதங்களாக நிர்வகித்து வரும் நிர்வாக குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"