விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி

ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலக சாதனை படைத்ததுடன், தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஆடவருக்கான10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட அவர், 246.3 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார். முன்னதாக அவர் 245 புள்ளிகள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது 246.3 புள்ளிகள் எடுத்ததன் மூலம் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி