#sanjusamson #rajastanroyals #csk #duplessis சஞ்சு சாம்சனுக்கு புகழாரம் சூட்டிய டு பிளெஸ்ஸி நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பு என டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார். வரும் 28ம் தேதி நடப்பு ஆண்டுக்காண ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களோ, அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரர் சஞ்சு சாம்சன் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நினைத்தாலே, பலருக்கும் சஞ்சு சாம்சன் முகம் நினைவுக்கு வரும் என்றும். அந்த அளவிற்கு அந்த அணியின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.