விளையாட்டு

அழிவு பாதை நோக்கி ஒருநாள் கிரிக்கெட் - ஜாம்பவான் சச்சின் எச்சரிக்கை

2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்..

தந்தி டிவி

2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2 பந்துகளை பயன்படுத்துவது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால், பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற யுக்தியை பயன்படுத்த முடியாமல் திணறுவதாகவும், இது கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என்றும் சச்சின் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்ததை சுட்டிக்காட்டியே சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"