விளையாட்டு

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட நிதிஷ் - சுந்தர் இணை

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ்குமார் ரெட்டி இணை, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதமடித்து அவுட்டான நிலையில், மறுமுனையில் நேர்த்தியாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 358 ரன்களை எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை காட்டிலும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்