மும்பையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் களம் இறங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நமன் திர் அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார். 160 ரன்கள் இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் 67 ரன்கள் விளாசினார். இளம் வீரர் கார்த்திக் ஷர்மா ஐபிஎல்லில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்