விளையாட்டு

JUSTIN || இந்திய அணிக்கு புதிய கேப்டன்? | INDIA | Australia

தந்தி டிவி

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் மெத்தபெட்டமைன் போதைபொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த பகுதியில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக சென்னை நீலாங்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்படை போலீசார் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டல் அருகே கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற சிலரது உடமைகளை சோதித்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதை வைத்திருந்த முகமது இலியாஸ், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த,முகமது அசாருதீன், சல்மான் பாரீஸ், ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6.6 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் மூவராம் ரூபாய் பணம், ஒரு செல்போன், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"