விளையாட்டு

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல், ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் வெளியிட்டுள்ளார். அதன்படி, விரைவில் போட்டி அட்டவணைகள் வெளியாகும் என்றும், நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இந்த தொடரானது, மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"