விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி சாம்பியன் - குடியரசு தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தந்தி டிவி
செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது சீசன் ஆன்லைனில் நடந்தது. 163 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய அணி ரஷ்யாவை எதிர்கொண்டது. இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருநாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய செஸ் அணியை எண்ணி நாட்டு மக்கள் மிகவும் பெருமைப்படுவதாக குடியரசு தலைவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்ய செஸ் அணிக்கும் குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்