இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகபட்டினத்தில் தொடங்குகிறது, இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சாஹாவும் , வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அணியில் இடம்பெறாமல் இருந்த அஸ்வின் மீண்டும் களமிறங்குகின்றனர் என கூறியுள்ளார், தொடக்க ஆட்டக்காராக களமிறங்வுள்ள ரோகித் சர்மா தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பவார் எனவும் இளம் வீரரான பந்திற்கு , பின்னர் வாய்ப்பளிக்கப்படும் என கூறினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாரு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் வீரர்கள்ளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.