இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஆசிய கோப்பை தொடர் மூலம் கிடைத்த சம்பளத்தை வழங்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது சம்பளத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய ராணுவத்திற்கு அளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டனின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.