விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்/2வது இன்னிங்சில் 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்

தந்தி டிவி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் குல்தீப் யாதவ் 28 ரன்களுக்கும், சிறப்பாக ஆடிய துருவ் ஜுரல் 90 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் இந்தியா 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 46 ரன்கள் முன்னிலையோடு 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்திற்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இன்னிங்சின் 4வது ஓவரிலேயே டக்கெட், ஆலி போப் ஆகிய இருவரையும், அஸ்வின் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். தொடர்ந்து ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார். சாக் கிராலி, ஸ்டோக்ஸ் ஆகியோர் குல்தீப் யாதவிடம் வீழ்ந்தனர். இதனால் அந்த அணி, 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"