விளையாட்டு

பாகிஸ்தானை ஊதி தள்ளியது இந்தியா : இறுதி போட்டிக்குள் நுழைந்து ஹாட்ரிக் சாதனை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி தொடர்ந்து 3 வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

தந்தி டிவி
தென்னாப்பிரிக்காவின் Potchefstroom நகரில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்த‌து. தொடக்க ஆட்டக்கார‌ர் ஐதர் அலி, கேப்டன் நசீர் அரைசதம் கடக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி அணி 172 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஒருபுறம் ( Saxena) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம், ஜெய்ஸ்வால்(Jaiswal), அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.. இதன் மூலம் 5 வது முறையாக ஜுனியர் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ