விளையாட்டு

பாகிஸ்தானை ஊதி தள்ளியது இந்தியா : இறுதி போட்டிக்குள் நுழைந்து ஹாட்ரிக் சாதனை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி தொடர்ந்து 3 வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

தந்தி டிவி
தென்னாப்பிரிக்காவின் Potchefstroom நகரில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்த‌து. தொடக்க ஆட்டக்கார‌ர் ஐதர் அலி, கேப்டன் நசீர் அரைசதம் கடக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி அணி 172 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஒருபுறம் ( Saxena) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம், ஜெய்ஸ்வால்(Jaiswal), அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.. இதன் மூலம் 5 வது முறையாக ஜுனியர் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

Tasmac | பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் மூடல் - திண்டாடும் குடிமகன்கள்

13 மாவட்ட கலெக்டர்கள், SP-க்களுக்கு பறந்த நோட்டீஸ் - ஐகோர்ட் அதிரடி

Jananayagan Issue | ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் யாருமே எதிர்பாரா திருப்பம்

#BREAKING || அவைத்தலைவர் சொன்ன வார்த்தை.. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

Parliament | மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. பரபரப்பில் மக்களவை