விளையாட்டு

உலகக் கோப்பை 2019 இந்திய அணி அறிவிப்பு...

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கேப்டன் கோலி மூன்றாவது இடத்திலும், தமிழக வீரர் விஜய் சங்கர் 4 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் கேப்டன் தோனி 5 வது இடத்திலும், கேதர் ஜாதவ் 6வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. 11வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார். கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக சாஹலும், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியும், தேர்வாகியுள்ளனர். கூடுதல் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும், கூடுதல் தொடக்க வீரராக கே.எல். ராகுலுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்