விளையாட்டு

பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது இந்தியா

தந்தி டிவி

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஆடிய இந்தியா, 3ம் நாள் ஆட்டத்தில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பவுலர் ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 162 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய வீரர்கள், நிதானமாக விளையாடினர். தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் பும்ரா பந்துவீச முடியாமல் போனதால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதனால் 27வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பி.ஜி.டி தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வென்ற கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்