விளையாட்டு

பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது இந்தியா

தந்தி டிவி

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஆடிய இந்தியா, 3ம் நாள் ஆட்டத்தில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பவுலர் ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 162 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய வீரர்கள், நிதானமாக விளையாடினர். தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் பும்ரா பந்துவீச முடியாமல் போனதால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதனால் 27வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பி.ஜி.டி தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வென்ற கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை