விளையாட்டு

இந்தியா Vs நியூசி. இன்று கடைசி டி-20 போட்டி : தொடரை வெல்லப்போது யார்?

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இருபது ஓவர் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இருபது ஓவர் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இதனால் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் போட்டியில் செய்த தவறை திருத்திக் கொண்டு இந்தியா சிறப்பாக விளையாடி 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி, இருபது ஓவர் தொடரை வென்று பழி தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணி வீரர்களும் வெற்றிக்கு போராடுவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"