விளையாட்டு

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : 3-ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடந்த 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்து உள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், சிட்னியில் நடந்த 3-ஆவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா, 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. 2-ஆவது இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, 407 ரன்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இறுதி நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து, 334 ரன்கள் எடுத்ததால், போட்டி டிராவில் முடிந்தது. அதிரடியாக விளையாடிய பண்ட் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி, பிரிஸ்பேனில் வருகிற 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை