விளையாட்டு

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : 3-ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடந்த 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்து உள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், சிட்னியில் நடந்த 3-ஆவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா, 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. 2-ஆவது இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, 407 ரன்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இறுதி நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து, 334 ரன்கள் எடுத்ததால், போட்டி டிராவில் முடிந்தது. அதிரடியாக விளையாடிய பண்ட் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி, பிரிஸ்பேனில் வருகிற 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்