விளையாட்டு

இந்தியா vs ஆஸி. 2 வது ஒருநாள் போட்டி : பதிலடி கொடுக்குமா இந்தியா?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷான் மார்ஷின் அபார ச‌த‌த்தால் ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்துள்ளது.

தந்தி டிவி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷான் மார்ஷின் அபார ச‌த‌த்தால் ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்துள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை சரிந்து வந்தன. ஆனால் ஒருபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மார்ஷ் 131 ரன்கள் குவித்து அந்த அணிக்கு வலு சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 298 ரன்கள் குவித்துள்ளது.

தொடர்ந்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணி தனது பேட்டங்கை தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. எனவே இந்த போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால், இந்திய அணி வீர‌ர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் டெஸ்ட் போட்டியில் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிய விரக்தியில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் ஒருநாள் தொடரை கைப்பற்ற போராடி வருவதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"