விளையாட்டு

"என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை"..140கோடி இந்திய மக்களின் ஏக்கம்.. பிறகு ரோஹித் சர்மா உருக்கம்

தந்தி டிவி

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்துள்ளார். தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், உலகக்கோப்பை தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், உலகக்கோப்பையை நழுவவிட்டது ஜூரணிக்க முடியாத வருத்தம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரர்களை போலவே உலகக்கோப்பை குறித்து கனவுகளை கொண்டிருந்த ரசிகர்களின் மனநிலையை உணர முடிவதாகவும், எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரோகித் சர்மா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு