விளையாட்டு

ஐபிஎல்-க்கு குட்பை.. சிபிஎல்-க்கு வெல்கம் - சிஎஸ்கே முன்னாள் வீரர் அதிரடி

தந்தி டிவி

முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு, கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு அறிவித்து ஓராண்டுக்குள் எந்த வெளிநாட்டு தொடர்களிலும் பங்கேற்கக்கூடாது என்ற பிசிசிஐ விதியால், அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இருந்து விலகினார். தற்போது பிசிசிஐ தடை நீங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி தொடங்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன் தாம்பேவுக்கு பிறகு, கரீபியன் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராயுடு பெற்றுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?