டோக்கியோ 400மீ ஓட்டபந்தயம் - 40 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
டோக்கியோவில் நடைபெற்ற 2025 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 25 வயதான அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனையான மெக்லாஃப்லின்-லெவ்ரோன் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 47.78 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு 48 வினாடிகளுக்குள் பந்தயத்தை முடித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.