விளையாட்டு

கண்ணீருடன் ஓய்வுபெற்ற உருகுவே கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரெஸ்

தந்தி டிவி

பிரபல உருகுவே கால்பந்து வீரரான லூயிஸ் சுவாரெஸ், தனது கடைசி போட்டியில் விளையாடிய நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். உருகுவேயில் நடைபெற்ற பராகுவேக்கு எதிரான, உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் அவர் ஓய்வுபெற்றார். போட்டி முடிந்த பின்பு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பியும், சக வீரர்கள் கட்டியணைத்தும் பிரியாவிடை அளித்தனர். போட்டிக்கு பின் குடும்பத்தினருடன் மைதானத்தில் நின்ற லூயிஸ் சுவாரெஸ், அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவை கண்டு கண்கலங்கினார். 37 வயதான சுவாரெஸ், 143 போட்டிகள் விளையாடி 69 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்