விளையாட்டு

கண்ணீருடன் ஓய்வுபெற்ற உருகுவே கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரெஸ்

தந்தி டிவி

பிரபல உருகுவே கால்பந்து வீரரான லூயிஸ் சுவாரெஸ், தனது கடைசி போட்டியில் விளையாடிய நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். உருகுவேயில் நடைபெற்ற பராகுவேக்கு எதிரான, உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் அவர் ஓய்வுபெற்றார். போட்டி முடிந்த பின்பு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பியும், சக வீரர்கள் கட்டியணைத்தும் பிரியாவிடை அளித்தனர். போட்டிக்கு பின் குடும்பத்தினருடன் மைதானத்தில் நின்ற லூயிஸ் சுவாரெஸ், அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவை கண்டு கண்கலங்கினார். 37 வயதான சுவாரெஸ், 143 போட்டிகள் விளையாடி 69 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்