விளையாட்டு

100ஆவது டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுகிறார் கருணரத்னே

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இலங்கை அணியின் முன்னணி தொடக்க வீரர் திமுத் கருணரத்னே (Dimuth Karunaratne) அறிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்து 172 ரன்களையும், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 316 ரன்களையும் கருணரத்னே அடித்துள்ளார். வருகிற 6ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லேவில் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆடவுள்ள நிலையில், இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக கருணரத்னே கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 100வது போட்டியாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை