விளையாட்டு

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.

தந்தி டிவி
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன. போட்டிகள் கடந்த 17- ஆம் தேதி முதல் ஜிம்கானா கிளப் ராமகிருஷ்ணா நினைவு மின்னொளி மைதானத்தில் நடைபெற்று வந்தன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற நிலையில், பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் ஜெயின் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி, லயோலா கல்லூரி அணியும் கோப்பையை வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்