விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தந்தி டிவி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளன. இதையடுத்து பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் ட்ராபி ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணி, சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும், சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்