விளையாட்டு

ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், கடந்த சனிக்கிழமை தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்த கடந்த சனிக் கிழமை, திருவான்மியூர் பகுதிக்கு தனது சொகுசுக் காரில் சென்ற ராபின்சிங்கை தடுத்த போலீசார், காரை பறிமுதல் செய்து, ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிந்திருந்ததால், கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கை போலீசார் அடையாளம் காணமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்