மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தவான், கே.எல்.ராகுல் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. ராகுல் 47 ரன்களிலும், தவான் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 16 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேற, இந்திய அணி 49 புள்ளி 1 வது ஓவரில் 255 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.